என்னுள் சென்றே என்னை நானே எண்ணிப்பார்க்கின்றேன்!
எண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!
விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
எல்லாப் பொருளின் உள்ளும் புறமும் நானேயா கின்றேன்!
பச்சை வண்ணமதில் இச்சை கொண்டே நிதம் பரவிப் போகின்றேன்!
புவியின் மேனியைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளி யாகின்றேன்!
வனங்கள் எங்கும் அடர்ந்து கிடக்கும் மரங்களாகின்றேன்!
வானம் பூமி இரண்டையும் இணைக்கும் கணங்களாகின்றேன்!
உயிரினம் தோன்றிட உயர்வினைக் காட்டிட மலையாய் நிற்கின்றேன்!
உயிர்களின் தாகம் தீர்த்திட உவந்தே நீரருவியாய் வீழ்கின்றேன்!
அன்பெனும் தேனை அகத்தினில் சுமந்தே பூக்களாய் பூக்கின்றேன்!
அண்டம் எங்கும் ஆனந்தம் நிலவிட அன்பாய் உருக்கொண்டேன்!
வண்டினமாகி வையகமெங்கும் வாய்மை வாசிக்கின்றேன்!
தென்றலெனவே தேடும் உயிர்க்குள் சுவாசம் நேசிக்கின்றேன்!
கொண்டலெனவே குளிர்மலைத் தழுவி துளியாய் இறங்குகின்றேன்!
வானம் கொடுத்த காதற்ப் பரிசாய் புவியின் கரங்களில் விளங்குகின்றேன்!
சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன் !
எண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!
விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
எல்லாப் பொருளின் உள்ளும் புறமும் நானேயா கின்றேன்!
பச்சை வண்ணமதில் இச்சை கொண்டே நிதம் பரவிப் போகின்றேன்!
புவியின் மேனியைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளி யாகின்றேன்!
வனங்கள் எங்கும் அடர்ந்து கிடக்கும் மரங்களாகின்றேன்!
வானம் பூமி இரண்டையும் இணைக்கும் கணங்களாகின்றேன்!
உயிரினம் தோன்றிட உயர்வினைக் காட்டிட மலையாய் நிற்கின்றேன்!
உயிர்களின் தாகம் தீர்த்திட உவந்தே நீரருவியாய் வீழ்கின்றேன்!
அன்பெனும் தேனை அகத்தினில் சுமந்தே பூக்களாய் பூக்கின்றேன்!
அண்டம் எங்கும் ஆனந்தம் நிலவிட அன்பாய் உருக்கொண்டேன்!
வண்டினமாகி வையகமெங்கும் வாய்மை வாசிக்கின்றேன்!
தென்றலெனவே தேடும் உயிர்க்குள் சுவாசம் நேசிக்கின்றேன்!
கொண்டலெனவே குளிர்மலைத் தழுவி துளியாய் இறங்குகின்றேன்!
வானம் கொடுத்த காதற்ப் பரிசாய் புவியின் கரங்களில் விளங்குகின்றேன்!
சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன் !
என்னுள் சென்றே என்னை நானே எண்ணிப்பார்க்கின்றேன்!
ReplyDeleteஎண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!
விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன் !
// என்னை வசியப்படுத்திய வரிகள் இவை. அருமை. :) //